2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வௌ்ளை வான் விவகாரம்; இருவர் நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளை வான் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தகவல் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின்போது,  முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் கலந்துகொண்ட இருவர்,வௌ்ளை வான்களில் நபர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்தது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (16) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .