2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாகன விபத்துகளில் 3 பேர் பலி

Amirthapriya   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 12 மணித்தியாலங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட விபத்துகளில், மூவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெதவச்சிய பிரதேசத்தில் நேற்றைய தினம் (18) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ​வௌ்ளவத்தையில் இடம்பெற்ற பஸ் மற்றும் மோட்டார் வாகன விபத்தில், மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த நபர் உயி​ரிழந்துள்ளார்.

மேலும் கலேவெல – வெஹெரகல பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகப் பொரிஸார் தெரிவித்துள்ளனர்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .