2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாகன விபத்துக்களால் கடந்த வருடம் 3017 பேர் மரணம்

Editorial   / 2017 நவம்பர் 21 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த வருடத்தில்  35199 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன்,இதில் 3017 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (21)நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு,வீதிகளின் நிலைமைகள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் பாவனை அதிகரிப்பு ஆகிய காரணங்களே வாகன விபத்துக்களுக்கான காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,2014ஆம் ஆண்டு 37966 வாகன விபத்துக்களால் 2440 பேரும்,2015ஆம் ஆண்டு 38107 விபத்துக்களில் 2816 பேரும்,கடந்த வருடம் 35199 விபத்துக்களால் 3017 பேரும் மரணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .