2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாயு கசிவால்- தொழிற்சாலைக்கு பூட்டு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 20 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்டுள்ள வாயு கசிவால் குறித்த தொழிற்சாலையானது 3 நாட்களுக்கு மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றிலிருந்து 22 ஆம் திகதி வரை குறித்த தொழிற்சாலை மூடப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதில் பணிபுரிந்த பணியாளர்கள் 99 பேர் நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில், 1200 பணியாளர்கள் தொழில்புரிவதுடன், கவனயீன நடவடிக்கை காரணமாக, தொழிற்சாலையின் முகாமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .