2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து பயணமாகும் பொலிஸ்மா அதிபர்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சால்  விசேட பயிற்சி ஒன்றிட்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஸ்கொட்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

பொலிஸ்மா அதிபருடன், பிரதி அமைச்சர் நளின் பண்டார, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் குறித்த பயிற்சிக்காக செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 29ஆம் திகதி இவர்கள் இலங்கையிலிருந்து செல்வர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகள் குறித்த விசாரணைகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் நியமிக்கப்பட்ட குழுவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X