2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எம்.பிக்கு எதிராக வழக்கு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான்  ரங்க திசாநாயக்க முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் ஆஜராகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், விஜயகலா விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து, உரிய அறிக்கை, சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

இதன் பிரகாரம், வழக்கை ஒத்திவைத்த நீதவான், அன்றை தினம், சட்ட மா அதிபரின் மேற்பார்வை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, குற்ற விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .