2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொட்டுவ- தும்மலக்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள, விடுதியொன்றில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த, 4 பெண்களும் விடுதியின் உரிமையாளரும் நேற்று (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, தங்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, அநுராதபுரம், கிம்புலாப்பிட்டி​ய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30- 40 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுதி என்ற பெயரில் விபசார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலின ஹெட்டியாராய்ச்சியின் பணிப்புரைக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .