2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விவசாயக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை

Editorial   / 2018 மே 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு விவசாயக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது இதன் இறுதி இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணொறுவ விவசாய தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை நேற்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

வறட்சி மற்றும் ஏனைய காரணங்களால் கடந்த சில வருடங்களாக நாட்டின் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஐந்து சதவீதத்தால் குறைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X