2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விஷ வாயு கசிவால் இருவர் உயிரிழப்பு

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளை பன்னம்பிட்டிய பிரதேசத்தில்  அமைந்துள்ள பலசரக்குப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் நேற்று இரவு (22) ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் அங்கு பணிபுரிந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தம்புளை- பன்னம்பிட்டிய பிரதேசத்தைச் ​சேர்ந்த மதுஷான் ஜயவர்தன (வயது 19), என்ற இளைஞனும், தம்புளை எபுல்ஹபே பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம். நிரோஷா தில்ருக்சி (வயது 30),என்ற யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இயந்திரத்தில் சேர என்ற கிழங்கை பொடி செய்த போது, குறித்த இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். பின்னர் இவர்கள் உடனடியாக தம்புளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இடைநடுவில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .