2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீடுகளில் பொருட்களைத் திருடிவந்த பெண் கைது

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பிரதேசங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்று பொருட்களைத் திருடிவந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, பள்ளேவல பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய சந்தேக நபரான பெண், பள்ளேவல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை கைதுசெய்த சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து நான்கு மடிக்கணினிகள், நான்கு அலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பெண், நிட்டம்புவ, கிரிபத்கொட, மீரிகம உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் பகல் நேரங்களில் நுழைந்து பொருட்களைத் திருடி வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .