Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 17 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் படுகொலைச் செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளின் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொரு ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியலே, எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவருக்கும் எதிரான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவின் முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பிலான விசாரணை இதுவரையிலும் நிறைவடையவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே, இவ்விருவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
8 hours ago
8 hours ago
19 Apr 2024