2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெலிக்கடை விவகாரம்: இருவரின் விளக்கமறியலும் நீடிப்பு

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் படு​கொலைச் செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொரு ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறி​யலே, எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவ்விருவருக்கும் எதிரான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவின் முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்து​கொள்ளப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பிலான விசாரணை இதுவரையிலும் நிறைவடையவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே, இவ்விருவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .