2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாடுகளில் இருந்து 109 பேர் வந்தனர்

J.A. George   / 2021 ஜனவரி 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று(15) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து 28 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 44 பேரும் ஜப்பானில் இருந்து 37 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஜேர்மன், மாலைத்தீவுகள், இத்தாலி மற்றும் பங்களாதேஷில் இருந்து மேலும் சிலர் நாட்டுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 6790 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X