2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹசீஸ் போதைப் பொருளுடன் நபர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹசீஸ் போ​தைப் பொருளுடன் பெலரூஸ் பிரஜையொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவ – உனவட்டுன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து, ஹசீஸ் போதைப் பொருள் 10 கிராமை மீட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கொழும்பு - பொரளை மற்றும் பதுளை பிரதேசத்தில் வைத்து 6 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர் இருவர்  நேற்று (18) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு,   பொரளையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் 35 வயதுடையவரெனவும், பதுளை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 25 வயதுடையரெனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சவூதி அரேபிய பிரஜையொருவர் நேற்று (18), கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .