2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஹரீனிடம் நலம் விசாரித்தார் சஜித்

Editorial   / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவை, அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்றுக்காலை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

அவருடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் சென்றிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தின தாக்குதல் தொடர்பில், சி.ஐ.டியினர் இன்று (23) விசாரணைக்கு அழைத்திருந்தனர். அவருக்கு திடீரென ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கொழும்பிலுள்ள நவ​லோக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X