2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் கடத்தியவருக்கு மரணத்தண்டனை தீர்ப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 03 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில், 18.24 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்றத்தால் இன்று(3) மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் ஷியாம் நிசாம் என்ற சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முறைபாட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்கவால் இந்த மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனையானது சமூகத்திற்கு முன்னுதாரணத்தைப் பெற்றுக்கொடுக்குமெனவும் நீதியரசர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X