2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை முகாமையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான், சந்தன விஜேசூரிய இன்று (25) உத்தரவிட்டார்.

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் முககாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வாளர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி, குறித்த தொழிற்சாலையிலுள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .