2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

13 வழக்குகள்; ஒருவருக்கு சிறை

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் பலசரக்குக் கடைகள், நகைக்கடைகளை உடைத்துத் திருடியமை, திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 29 வயதுடைய நபரொருவருக்கு, 4 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து, நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (01) உத்தரவிட்டார்.

குறித்த நபருக்கெதிராகத் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த 13 வழக்குகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, 2 வருடங்கள் கட்டாய சிறைத் தண்டனையும், 13,500 ரூபாய் அபராதமும், அத்தொகையைச் செலுத்தாத பட்சத்தில், மேலும் இரண்டு வருடங்கள் சிறைதண்டனையும் விதித்து, நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .