2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

23 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

 

திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு,  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 23 குடும்பங்களுக்கென அமைக்கப்பட்ட வீடுகள், பயனாளர்களுக்கு நேற்று (04) கையளிக்கப்பட்டன.

கட்டார், செராட்டி நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில்,  இவ்வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், இவ்வீட்டுத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய ஹாலீத் கௌதா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஜே.எம்.லாஹீர், ஆர்.எம்.அன்வர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.தாணீஸ், ஐ.எம்.வஹ்ஜீத், பீ.டி.ஆப்தீன், ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.மிஹ்லார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .