2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்ற குடும்பஸ்தர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்

சீனக்குடா பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானம் விற்ற 44 வயது குடும்பஸ்தர், 180 மில்லிலீற்றர் கொண்ட 37 மதுபான போத்தல்களுடன் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார் என, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த  இரகசியத் தகவலொயடுத்து, சுற்றிவலைப்பை மேள்கொண்டபோதே, அவரது வீட்டிலிருத்து இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபரையும் மதுபான போத்தல்களையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்பகைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகநபர்களை, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, திருமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .