2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் கையளிப்பு

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும்  நல்லிணக்கத்துக்குமான செயலணியின்  தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சலப்பையாறு பிரதேசத்தில், பொதுமக்களிடம் இன்று (27) கையளித்தார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியிலுள்ள 22 மீனவக் குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் இவ்வாறு கையளிக்கப்பட்டதுடன், 03 கிணறுகளும் உள்ளக வீதிகளும் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.மணிவண்ணன், குச்சவெளிப் பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாரக், அரச உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .