2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரை ஏக்கர் பகுதியில் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) காணாமல் போன இளைஞன், நேற்று (18) மாலை கிணறு ஒன்றுக்குள் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா,  அரை ஏக்கர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதான மாலிக் முபாரிஸ் என்ற இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்த இளைஞன், தான் சாரதியாக தொழில் புரிந்து வந்த முதலாளியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .