2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடுதல்

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வியாபார நிலையங்களிலுள்ள அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் பணிகள், கந்தளாய் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளவென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, அனைத்து அளவைகள் நிறுக்கும் உபகரணங்களுக்கும் சரி பார்த்து சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன், கந்தளாய் பிரதேசத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய தினத்தில் சமுகமளித்து, தங்களது அளவை உபகரணங்களைப் பரீட்சித்துச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X