2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அளவை நிறுவையில் மோசடி

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கந்தளாய்  நகர் பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மோசடி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 11 வர்த்தகர்கள்,  நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர் என, திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் பிரிவின் பரிசோதகர் எஸ்.ரொசான் குமார் தெரிவித்தார்.

இதேவேளை, இம்மாதம் 13 -  17 மற்றும் 20, 21  ஆகிய திகதிகளில், கந்தளாய் பிரதேச செயலக முத்திரை பதிக்கும் மத்தியஸ்தானத்தில்  அளவை, நிறுவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் பணிகள் நடைபெறவுள்ளதால், முத்திரை பதிக்காத வர்த்தகர்கள் வருகை தந்து, தங்களுடைய வர்த்தகத்தை சட்டரீதியாக பதிவுச் செய்துக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .