2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆடுகளை திருடிய இளைஞனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பகுதியில் ஆடுகள் மூன்றைத் திருடி விற்பனை செய்த அதேபகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர், அக்போபுர பகுதியில் உள்ள ஆட்டுத் தொழுவத்திலிருந்து ஆடுகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக, ஆட்டு உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஞாயிற்றுக்கிழமை (17) கைதுசெய்ப்பட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .