2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆட்லறிக் குண்டு மீட்பு

தீஷான் அஹமட்   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் வட்டம் பகுதியில் வாய்க்கால் நீரில் புதைந்து காணப்பட்ட ஆட்லறிக் ரக குண்டு,  திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) காலை மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாய்க்காலில் சந்தேகித்துக்கிடமான வெடிபொருள் காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள், மூதூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரின் தகவலுக்கு இணங்க, விசேட அதிரடிப்படையினரால் சுமார் 20 கிலோகிராம் இந்த ஆட்லறிக் ரக குண்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .