2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆளுநருக்கு அவசரக் கடிதம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 மார்ச் 27 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில்  பட்டதாரி பயிலுநர் ஆசிரியர், ஆசிரிய உதவியாளர்களுக்காகக் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வயதெல்லையில் மாற்றம் செய்யுமாறு கோரி, மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதமொன்றை, கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்  அனுப்பிவைத்துள்ளது.

அக்கடிதத்தில், பட்டதாரி பயிலுநர்களுக்காகக் கோரப்பட்டுள்ள 40 வயது எல்லையை 45 ஆகவும், ஆசிரிய உதவியாளர்களுக்காகக் கோரப்பட்டுள்ள 35 வயது எல்லையை 40 ஆகவும் அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இதனால் பாதிக்கப்பட்ட  பலர் பெரிதும்  நன்மையடைவர் என்பதையும் இக்கடிதத்தில் மேலும் இச்சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .