2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் எழுவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டை கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இந்திய மீனவர்கள் ஏழு பேரைக்​ கைதுசெய்துள்ளதாக, துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள், இந்தியா, டாடாநகர், நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்கும் 41 வயதுக்கும் இ​டைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத்​ தெரிவித்த துறைமுகப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .