2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் - கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

இலங்கை நிர்வாக சேவை  பயிற்சி தர  உத்தியோகத்தர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று,  ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல்  நடைபெற்றது.

உத்தியோகத்தர்களை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுநர் இந்த நாட்டின் தேசிய அபிவிருத்தியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் நிர்வாக சேவை அதிகாரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், அதிகாரப் பரவலாக்கல், மாகாண சபை நிர்வாக முறை ஆகியவற்றை தெளிவுபடுத்திய ஆளுநர், மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகங்களுக்கிடையில் சுமூகமான தொடர்பு நடைமுறைகளையும் வலியுறுத்தினார்.

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கிழக்கு மாகாண ஆளுநர், இவ்விடயத்தில் நிர்வாக சேவை அதிகாரிகள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .