2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’உரிய பதில் வழங்கவும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 15 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தோரின் போராட்டம், இன்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்டு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகவுள்ள கடலுக்குள் இறங்கி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கவனம் செலுத்தி,  தங்களுக்கு உரிய பதில் வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X