2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக யுத்த அநாதைகள் தினத்தை முன்னிட்டு கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தீஷான் அஹமட்   / 2018 ஜனவரி 06 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக யுத்த அநாதைகள் தினத்தை தினத்தை முன்னிட்டு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள், மூதூர் - பாரதிபுரம் சிவன் கோயிலுக்கு முன்னாள் அமைதியான முறையில் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (06) முன்னெடுத்தனர்.

 


இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் , பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் , யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கற்றலுக்கான உதவிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு முன்னர் சிவன்  கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .