2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன், எ.எம்.ஏ.பரீட்​  

திருகோணமலை காளிகோவிலடி இளைஞர்களால், கொரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள வசதி குறைந்த மக்களுக்கு, உலருணவு பொருள்கள், இன்று(5)  வழங்கப்பட்டன. 

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரால்குழி, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் சின்னத்தோட்டம், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் கன்னியா, விளான்குளம், தேவாநகர், ஆனந்தபுரி, ஜின்னாநகர், மனையாவெளி, மட்டிக்களி வாழ் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச மக்களது நிதி பங்களிப்புடன், காளிகோவில் தேவஸ்தானம் ஜெகநாதன் சிப்பிங்ஸ் நிறுவனம் என்பன இதற்கு ஒரு தொகை பணத்தை வழங்கி இருந்தன.


  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X