Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
எப். முபாரக் / 2018 ஜூலை 18 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரங்கள் மூன்றில் மணல் ஏற்றிச் சென்ற சாரதிகள் மூவரையும் நேற்று முன்தினம்(17) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய், வான்எல மற்றும் சூரியுபுர பகுதியைச் சேர்ந்த 35,48,50 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், அனுமதிப்பத்திரமின்றி மூன்று உழவு இயந்திரங்களில் கங்கைப் பகுதியிலிருந்து கந்தளாய்க்கு மணல் ஏற்றிச் சென்ற வேளையிலேயே பொலிஸார் கைது செய்ததாக தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, சந்தேக நபர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago
25 Apr 2024