2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எரிவாயு சிலின்டரை திருடியவர் கைது

எப். முபாரக்   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, சமையல் எரிவாயு சிலின்டரைத் திருடிச் சென்ற நபரை, உப்புவெளிப் பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேகநபருக்கெதிராக, ​ஏற்கெனவே திருட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .