2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சா சுருட்டுகளை விற்றவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கஞ்சா கலந்த சுருட்டுகளை விற்பனை செய்து வந்த நபரொருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், மீன்வாடியிலும் திருகோணமலை நகரிலும், கஞ்சா கலந்த சுருட்டுகளை மறைத்து விற்பனை செய்து வருகிறாரென, திருகோணமலை குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருகோணமலை நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட வேளையில், கஞ்சா கலந்த 12 சுருட்டுகளை அவர் வைத்திருந்தாரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .