2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி மாடுகளால் போக்குவரதுப் பாதிப்பு

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதான  வீதி, மட்டக்களப்பு வீதிகள் ஊடாக  கட்டாக்காலி மாடுகள் பகலிலும் இரவிலும் நடமாடுவதால் போக்குவரத்தில்  பல்வேறு அசௌகரியங்களை  எதிர்நோக்குவதாக  பொதுமக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிகளில், இரவு வேளையில், வீதி விளக்குகளின் ஒளி பிரகாசமின்மையாலும் வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகள் குறுக்காகப் பாய்ந்து திரிவதனாலும் வாகனங்களுடன் மோதி அதிகளவான விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, இந்தக் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த உரியவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .