2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கள்ள நோட்டுக்களுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 10 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய்  பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால், 5000 ரூபாய்  கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நேற்று(09) கந்தளாய் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

5000  ரூபாய் தாள்கள் பத்தை தம்வசம் வைத்திருந்த  இளைஞர் ஒருவரை நேற்று முன்தினம்(08) கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபர், தம்பலகாமம், தாயிப் நகர் பகுதியைச் சேர்ந்த,24 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .