2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காட்டு யானைகள் அட்டகாசம்

தீஷான் அஹமட்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தர்ல் பாதிக்கப்பட்ட திருகோணமலை, நாவலடி கிராமப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நேற்று (16) வீடுகளும் பயிர்ச் செய்கைகளும் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது, குடியிருப்பு வீடுளும் பயன்தரும் வாழை மரங்களும் சேதமாகியுள்ளன.

விவாசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் தமது அன்றாட வாழ்க்கை, காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் அட்டகாசத்திலிருந்து தங்களது குடியிருப்புகளையும் பயிர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, கிராமத்தைச் சுற்றி யானை வேலி அமைத்துத் தர வேண்டுமெனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X