2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

குடிநீர் விநியோகம் வழமைக்குத் திரும்பியது

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் குழாய் மூல குடிநீர் வழங்கல் ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று (15)  வழமைக்கு திரும்பியுள்ளதாக, மாவட்ட வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட அவசரத் திருத்த வேலை காரணமாக கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதியில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவித்து, சுமார் ஒருவார காலமாகியும் சீரான நீர்விநியோகம்   இல்லாமையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இதேவேளை, அதியுயர் அழுத்த பிரதான மின் ஆழியில் பராமரிப்பு வேலை மேற்கொள்ளவுள்ளதால் இன்றும் (15) நாளையும் (16) காலை 7 மணியிலிருந்து பிற்பகல் 5 மணி வரை, திருகோணமலை மாவட்டம் பூராகவும் மின் தடைப்படுமென, திருகோணமலை மாவட்ட மின்சார சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .