2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஜூலை 12 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையாக பொலிஸ்  பிரிவின் ஆண்டாள் குளம் பகுதியில், கேரள கஞ்சா வைத்திருந்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை நேற்று (11)  திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, ஆண்டாள் குளத்தைச் சேர்ந்த (வயது 43 )  என்பவரிடம் இருந்து 01 கிலோகிராம் 152  கிராம் கேரளா கஞ்சா  மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர், ஏற்கனவே கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கஞ்சா விற்பனை செய்ய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை, திருகோணமலை தலைமையாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X