2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேரளா கஞ்சா வைத்திருந்தவர் கைது

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஜயந்திபுரப் பகுதியில்,எண்ணூற்றி ஐம்பது மில்லி கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை  ஜயந்திபுரப் பொலிஸார் நேற்று(21) மாலை கைது செய்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் சூரியபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவ​ரையே  கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த சந்தேகநபரை தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, இவரை கந்தலாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .