2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பூரில் 16 பேர் கைது

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர்  பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வடிசாராயத்தை  வைத்திருந்த, விற்பனை செய்த,   அவற்றை உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில் 16 பேர், நேற்று (03)  கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து மொத்தமாக 41,500 மில்லி லீற்றர் வடிசாராயமும் 41,650 மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள், சேனையூர், பாட்டாளிபுரம், முத்துநகர், தங்க நகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்  இவர்களை   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .