Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தம்பலகமம் பகுதியில் பதின்மூன்று வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய, பதின்னெட்டு வயதுடைய இளைஞரை, இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ,கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க இன்று(8) உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில், 42/32,சாந்த செபஸ்டியன் வீதி,கொழும்பு 12,என்ற முகவரியைச் சேர்ந்த, நபயொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், கொழும்பிலிருந்து தம்பலகமத்திற்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் பக்கத்து வீட்டிலிருந்த பதின்மூன்று வயதுடைய சிறுமியை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அழைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தம்பலகமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபரை தம்பலகமம் பொலிஸார் நேற்று(7) கைது செய்து, கந்தளாய் நீதிமன்ற நீதிமன்றத்தில் இன்று (08) முன்னிலைப்படுத்தியப்போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024