Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
எப். முபாரக் / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாயில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பத்து ரயில் சிலிப்பர் கட்டைகளைத் திருடிய நபரொருவருக்கு, ஆறு மாதகால கட்டாய சிறைதண்டனையும், இரண்டு இலட்சம் ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறும் அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் சிறைதண்டனையும் விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, இன்று(19) உத்தரவிட்டார்.
அக்போபுர, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதியின்றி பத்து ரயில் சிலிப்பர் கட்டைகளைத் திருடி வைத்திருந்த நிலையில், பொலிஸாரால் அப்போது கைதுசெய்யப்பட்டு, குறித்த நபருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில், இன்று அந்நபரை குற்றவாளியாக இணங்கண்டு, கட்டாய சிறைதண்டனையும், நட்டஈடும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago