2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சூதாடிய எண்மர் சிக்கினர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் சூதாடிய குற்றச்சாட்டில், குடும்பஸ்தர்கள் 8 பேர், நேற்றிரவு (14) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிண்ணியா, திருகோணமலை, பூவரசந்தீவு, குட்டிக்கராச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், இரவு வேளைகளில் சூது விளையாடி வருவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளனரெனவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், சூதாடுவதற்குப் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஒரு தொகைப் பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேரையும், பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் எதிர்வரும் 24ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணித்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .