2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’’செமட செவண’’ திட்டத்தின் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நாளை

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 28 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதே செயலகப்பிரிவிலுள்ள மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நாளை (29) நடை பெறவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 100வது மாதிரி கிராமமான கைலாயபுரம் கிராமமே இக்கிராமமாகும்.

"செமட செவண" திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டு திட்டத்திணை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச  அவர்களினால் மக்களிடம் இவ் வீடுகள் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .