2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட டெலோ வேட்பாளர் தெரிவு

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்றாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) வேட்பாளராக, கட்சியின் நிர்வாகச் செயலாளர் பரமலிங்கம் நித்தியானந்தம் (நித்தி மாஸ்டர்) அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருக்கோணமலை டெலோ அலுவலகத்தில் கட்சியின் தலைவரும்  நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய செல்வம் அடைகலநாதன் தலைமையில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள், பொது மக்களுக்கிடையிலான விசேட சந்திப்பிலேயே, இவ்வாறு நித்தி மாஸ்டர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சத்திப்பில், டெலோ அமைப்பின் சர்வதேச அமைப்பாளர் புளேந்திரராஜா, கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளரும் கட்சியின் உப தலைவருமாகிய பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் ஐனா, கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .