2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருகோணமலையில் 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்,அப்துல்சலாம் யாசீம், எஸ்.எம்.றனீஸ், எஸ்.சசிகுமார்

திருகோணமலை மாவட்டத்தில், பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளில், 12 ஏக்கர்  காணிகள், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகரவினால் நேற்று விடுக்கப்பட்டது. அதற்கான ஆவணம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

குச்சவெளி -கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கரும், மூதூர் பாட்டாளிபுரத்தில் 2 ஏக்கரும், தோப்பூரில் 3 ஏக்கரும்  சேருநுவர- சித்தாற்றில்  2 ஏக்கருமென, 12 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

காணிகளைக் கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலக  வளாகத்தில் நேற்று  (10) திங்கட்கிழழை  பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X