2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் 272,822 வாக்காளர்கள்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில்  திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக,  272,822 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம், மூதூர், திருகோணமலை, சேருவில ஆகிய மூன்று  தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இதில் மூதூர் தொகுதியில் 103,681 வாக்காளர்களும்  திருகோணமலைத் தொகுதியில் 91,907 வாக்காளர்களும் சேருவில தொகுதியில் 77,234 வாக்காளர்களும் பதியப்பட்டுள்ளார்கள்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இரு ஆசனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொது ஜன ஐக்கிய முன்னணி ஆகியவற்றுக்கு  தலா  ஒரு ஆசனமும்  கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .