2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டது

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் உள்ள 5ஆம் கட்டைப்பிரதேசத்தில், ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார். 

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரொருவர், காய்ச்சல், இருமல் காரணமாக, திருகோணமலை பொது வைத்தியசாலையில நேற்று(31) மாலை அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொவிட் 19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர், மட்டக்களப்பு போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும்  
இதனையடுத்து குறித்த இளைஞனின் குடும்பம், அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .