2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருகோணமலையில் முன்னாள் எம்.பிகள் ஐவர் களத்தில்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர்  போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இரா.சம்பந்தன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் சுசந்த புஞ்சிநிலமே, ஐக்கிய மக்கள் சக்தியில் அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் ஆகிய முன்னாள் எம்.பிகள் போட்டியிடுகின்றனர்.

அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நால்வர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் திருமதி ஆரியவதி கலப்பதி, பிரியந்த பத்திரண, நிமல் காமினி ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியில் டொக்டர் அருண சிறிசேன ஆகிய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நால்வர், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .